» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.104.167 கோடி கடன் உதவி வழங்கல்

சனி 8, மார்ச் 2025 5:39:44 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 1206 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.104.167 கோடி மதிப்பிலான வங்கி கடன்களை ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (08.03.2025) நடைபெற்ற உலக மகளிர் தின விழா 2025-ல் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள், நலத் திட்ட உதவிகள் ஆகியவற்றை வழங்கி விழாப்பேருரை ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் வைத்து காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மேயர் பெஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமனற உறுப்பினர் எம்.சி.சண்முகையா , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா,  ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 1206 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.104.167 கோடி மதிப்பிலான வங்கி கடன்களை வழங்கினார். விழாவில் துணை மேயர் செ.ஜெனிட்டா , திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மல்லிகா , மாவட்ட செயல் அலுவலர் (வாழ்ந்து காட்டுவோம்) தாமோதரன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory