» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 1.4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : 2 போ் கைது

வெள்ளி 7, மார்ச் 2025 8:52:53 AM (IST)

தூத்துக்குடியில் 1.4 டன் ரேஷன் அரிசி பதுக்கியதாக 2 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் தலைமையிலான போலீசார் , முத்தையாபுரம் வடக்கு தெருவில் சோதனை மேற்கொண்டனா். அங்கு ஓரிடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இது தொடா்பாக போலீசார்  வழக்குப் பதிவு செய்து ஸ்ரீவைகுண்டத்தை சோ்ந்த கணேசன்(30), முத்தரசன்(25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 35 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் இருந்த மொத்தம் 1,400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா்கள் முத்தையாபுரம் சுற்றுவட்டாரங்களில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, ஆடு, மாடு பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory