» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: 2பேர் காயம்

வியாழன் 6, மார்ச் 2025 8:20:15 PM (IST)

தூத்துக்குடி அருகே பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். மேலும் 2பேர் படுகாயம் அடைந்தனர்.  

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் காமராஜ் நகரை சேர்ந்த பட்டு மாரியப்பன் மகன் பட்டு தங்கம் (23). இவர் தனது இருசக்கர வாகனத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (21) என்பவரை ஏற்றிக்கொண்டு புதியம்புத்தூரில் இருந்து ஓட்டப்பிடாரம் செல்லும் சாலையில் தனியார் ஆஸ்பத்திரி அருகே சென்று கொண்டிருந்தார். இவருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த புதியம்புத்தூர் நீராவிமேடு பகுதியை சேர்ந்த துரைமுத்து(45) என்பவர்திடீரென வலது பக்கம் திரும்பி உள்ளார். 

அப்போது பின்னால் வந்தபட்டுதங்கம ஓட்டி வந்தஇருசக்கர வாகனம் துரைமுத்து ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். அருகில் உள்ளோர் 3 பேரையும் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சென்றசிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பட்டு தங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்தகாயமடைந்த மற்ற இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory