» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் 12ம் தேதி மாசி திருவிழா தேரோட்டம் : ஏற்பாடுகள் தீவிரம்; பக்தர்கள் வருகை அதிகரிப்பு
வியாழன் 6, மார்ச் 2025 7:59:48 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வரும் 12ம் தேதி மாசி திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாக்களில் மாசித் திருவிழாவும் ஒன்று . அதன்படி இந்த ஆண்டு மாசி திருவிழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது . அதன்படி நான்காம் நாள் திருவிழாவான இன்று வியாழக்கிழமை மாலை சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும்., அம்மன் வெள்ளி சப்பர வாகனத்திலும் வீதி உலா வருகின்றனர்.
மாசி திருவிழா யொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து சாரை சாரையாக பாதயாத்திரை வந்தனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன் தலைமையில் அறங்காவலர் குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர். இதனிடையே மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேரை தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)










