» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் 12ம் தேதி மாசி திருவிழா தேரோட்டம் : ஏற்பாடுகள் தீவிரம்; பக்தர்கள் வருகை அதிகரிப்பு

வியாழன் 6, மார்ச் 2025 7:59:48 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வரும் 12ம் தேதி மாசி திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில்  ஆண்டு தோறும்  நடைபெறும் விழாக்களில் மாசித் திருவிழாவும் ஒன்று . அதன்படி இந்த ஆண்டு மாசி திருவிழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது . அதன்படி நான்காம் நாள் திருவிழாவான இன்று வியாழக்கிழமை மாலை சுவாமி வெள்ளி யானை  வாகனத்திலும்.,  அம்மன் வெள்ளி சப்பர வாகனத்திலும் வீதி உலா வருகின்றனர். 

மாசி திருவிழா யொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து சாரை சாரையாக பாதயாத்திரை வந்தனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன் தலைமையில் அறங்காவலர் குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர். இதனிடையே மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேரை தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory