» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சாதனை மகளிருக்கு விருது வழங்கும் விழா!

வியாழன் 6, மார்ச் 2025 3:48:47 PM (IST)



தூத்துக்குடியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்கம் & விமன்ஸ் சேவா டிரஸ்ட் மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், காமராஜ் மகளிர் கல்லூரி இணைந்து சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் & விமன்ஸ் சேவா டிரஸ்ட் நிறுவனர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். 

காமராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் வான்மதி, காமராஜ் கல்லூரி முதல்வர் அசோக் ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக உதவி ஆட்சியர் (பயிற்சி) சத்யா, கல்லூரி கல்வி இணை இயக்குனர் ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மகளிருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர். நிகழ்ச்சியில் காமராஜ் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பூங்கோதை தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில தலைவர் சுபாஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மகளிர் தின கொண்டாட்டத்தை ஒட்டி பாரம்பரிய உணவு கூடங்கள் அடங்கிய கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் ரசாயன கலப்படம் இல்லாமல் பாரம்பரியமான முறைப்படி தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் ஸ்னாக்ஸ் இடம்பெற்று இருந்தது. மேலும் பெண்களின் தைரியம், பெண்மையை போற்றுதல் போன்ற வடிவங்களில் கோல போட்டியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பலவிதமான கோலங்களை வரைந்திருந்தனர். தொடர்ந்து பெண்களுக்கான நடனப் போட்டிகள் நடைபெற்றது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விழாவின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், பெண்களை கொண்டாட கூடிய வகையில் சர்வதேச மகளிர் தினத்தை இன்று கொண்டாடுகிறோம். இதில் பல துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு பீனிக்ஸ் விருது 17வது ஆண்டாக வழங்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் எந்த கட்டணமும் இல்லாமல் பெண்களுக்கு விற்பனை கூடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த விற்பனை கூடங்களில் ஸ்டால் வைத்துள்ள பெண்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்காக உதவ வங்கி அதிகாரிகளும் வந்துள்ளனர். இது ஒரு முன்மாதிரியான நிகழ்வாக தூத்துக்குடியில் நடத்தப்படுகிறது என்றார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory