» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எட்டயபுரத்தில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

வியாழன் 6, மார்ச் 2025 12:22:44 PM (IST)



எட்டயபுரத்தில்  புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று 06.03.2025 வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் பதிவுத் துறையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள எட்டயபுரம் புதிய சார் பதிவாளர் அலுவலகக் கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டார். துணைப்பதிவுத்துறை தலைவர் திருநெல்வேலி மண்டலம் செ. செந்தமிழ் செல்வன், மாவட்ட பதிவாளர்(நிர்வாகம்) பாளையங்கோட்டை பொ.சண்முகசுந்தரி, எட்டயபுரம் சார்பதிவாளர் செ.இராமமூர்த்தி, எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலெட்சுமி சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory