» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காவல்துறையை கண்டித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆர்ப்பாட்டம்!
வியாழன் 6, மார்ச் 2025 12:15:01 PM (IST)

தூத்துக்குடியில் காவல்துறையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், அல்லிகுளம் முருகன் நகரைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் மாரிமுத்து (43). இவர் ஐக்கிய ஜனதா தளம் மாநிலத் தொழிலாளர் அணி மாநிலச் செயலாளராக உள்ளார். இவரது உடன் பிறந்த தம்பி பாலமுருகன் (39). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக பாலமுருகனின் மனைவி பவானி (36) என்பவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இது சம்பந்தமாக பவானியின் புகார் மனு மீது விசாரணைக்கு பின்னர் முடித்து வைக்கப்பட்டது.. இந்த நிலையில், மாரிமுத்துவை தாக்கியதாக அவரது தம்பி மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும், பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐக்கிய ஜனதா தள கட்சியின் தொழிலாளர் அணி சார்பாக மாநில தொழிலாளர் சங்க பேரவை தலைவர் தாமரை வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் குழந்தை பாண்டி உட்பட பலர் கலந்து காெண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)











கந்தசாமிMar 6, 2025 - 01:23:54 PM | Posted IP 162.1*****