» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பிடிபடும் பாம்புகளை உப்பள புதருக்குள் விட்டு செல்வதால் தொழிலாளர்கள் அச்சம்!
வியாழன் 6, மார்ச் 2025 10:40:29 AM (IST)
தூத்துக்குடியில் பிடிபடும் பாம்புகள் உப்பளங்கள் அருகே உள்ள புதர்களில் விடப்படுவதால், அங்கிருந்து அவை உப்பளங்களுக்கு படையெடுத்துவருவதால் தொழிலாளர்கள் பீதியுடன் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடிக்கு பெருமை சேர்ப்பதில் உப்புத் தொழிலும் ஒன்றாகும். இந்த உப்பளங்களில் பணியாற்றுவது அனைவராலும் செய்யமுடியாத ஒன்றாகும். இங்கு அதிகாலை 5 மணிக்கு முன்னர் இருந்து பணி தொடங்கும். தற்போது கடந்த சில நாள்களாக தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் உள்ள உப்பளங்களில் பாம்புகள் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக அங்குள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், மாநகர் பகுதிகளில் தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்படும் பாம்புகள் இங்குள்ள புதர்களில் விடப்படுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நகர் பகுதி குடியிருப்புகளில் பிடிபடும் பாம்புகளை சாக்கு மூட்டைகளில் பிடித்து வரும் தீயணைப்பு துறையினர் அவற்றை வனத்துறையில் ஒப்படைக்காமலும், காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லாமலும் உப்பளங்கள் அருகேயுள்ள சிறியபுதர்களில், குறிப்பாக மத்திய கடலாராய்ச்சி கழகம் அருகேயுள்ள பஸ் நிறுத்தம், கோயில் அருகேயுள்ள உப்பளங்களுக்கு செல்லும் மண் சாலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் விட்டு செல்கின்றனர்.
பகலில் பாம்புகளை விட்டு சென்றால் தொழிலாளர்கள் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால் இரவு நேரங்களில் மொத்தமாக கொட்டி செல்கின்றனர். அவை அருகில் உள்ள உப்பளங்கள், ஷெட்கள், இரவு காவலாளிகளின் குடிைசகள், வாங்கிங் ட்ராக்குகளுக்குள் சர்வசாதாரணமாக நடமாட துவங்குவதால் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். மேலும் பல தொழிலாளர்கள் அதிகாலைக்கு வேலைக்கு வரமுடியாமல் பாம்புகளால் 7 மணிக்கு பின்னரே வேலைக்கு செல்ல முடியும் நிலை உள்ளது.
இது குறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது: வீடுகளில் பிடிக்கப்படும் பாம்புகளை முறையாக பெற்றுக்கொள்ள வனத்துறையினர் வருவதில்லை. அதனால், அருகில் உள்ள புதர்களில் விடப்படும் நிலை ஏற்படுகிறது. இருப்பினும், மலைப் பகுதிகளில் பாம்புகளை விடுவதற்கு நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினர்.
அதிகாலையில் வேலைக்குச் செல்லும் உப்பளத்தொழிலாளர்கள் இந்த விஷப் பாம்புகளால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய தீர்வு காணவேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)










