» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு!

வியாழன் 6, மார்ச் 2025 8:34:42 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் ரூ.3.60லட்சம் பறிமுதல் செய்த விவகாரத்தில், மாவட்ட பதிவாளர் மற்றும் ஏரல் சார்-பதிவாளர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் பல்வேறு பத்திரப்பதிவுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெறுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. 

இதைத் தொடர்ந்து கடந்த 3-ந் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி  பீட்டர்பால்துரை தலைமையிலான போலீசார் மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) அலுவலகத்தில் திடீர் சோதனை செய்தனர். அப்போது, மாவட்ட பதிவாளர் (தணிக்கை) சதாசிவம், ஏரல் சார்பதிவாளர் செல்வக்குமார் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 63 ஆயிரம் ரொக்கப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மாவட்ட பதிவாளர் (தணிக்கை) சதாசிவம், ஏரல் சார்பதிவாளர் செல்வக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

IndianMar 6, 2025 - 10:32:49 AM | Posted IP 162.1*****

kollariyar kootam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory