» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் வாலிபர் தற்கொலை!

புதன் 5, மார்ச் 2025 9:07:00 PM (IST)

சாத்தான்குளம் அருகே மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் அருகே உள்ள கீழ கருங்கடல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா மகன் ராஜதுரை (30). இவரது மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் இன்று காலை வீட்டில் அவர் தூக்கிட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்தறி்கு சென்று அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory