» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பூமி பூஜை : இஸ்ரோ விஞ்ஞானிகள் பங்கேற்பு

புதன் 5, மார்ச் 2025 8:27:50 PM (IST)



குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இஸ்ரோ விஞ்ஞானிகள் பங்கேற்றனர். 

இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படுகிறது. இதற்காக அங்கு 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அன்றைய தினமே வளி மண்டலத்தை ஆய்வு செய்ய ரோகினி-6 எச்.200 என்ற சிறிய வகை ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் முதன்முறையாக கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்காக பூமி பூஜை இன்று நடை பெற்றது. பூஜையில் இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன் மற்றும் அதிகாரிகள், வல்லுனர்கள் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். கட்டுமான பணிகள்  அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என கூறப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் குலசேகரன் பட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சிறிய வகை ராக்கெட்டுகள் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory