» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்!

புதன் 5, மார்ச் 2025 8:12:03 PM (IST)



தூத்துக்குடியில் 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். 

1993 ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், ஒரு மாத கோடை விடுமுறை முழுமையாக வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர் ஆக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது அவர்களுக்கு பணிக் கொடையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.

பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில், மாவட்டச் செயலாளர் சந்திரா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயராணி, மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி, ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, சிஐடியூ மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து உட்பட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory