» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏரலில் ரூ.5.29 கோடி மதிப்பில் புதிய சுகாதார கட்டிடங்கள்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்

புதன் 5, மார்ச் 2025 4:27:34 PM (IST)



ஏரலில் ரூ.5.29 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 புதிய சுகாதார கட்டிடங்களை கனிமொழி எம்பி இன்று திறந்து வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மூலம் ஏரல் அரசு சமுதாய நல மையத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.5.29 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 புதிய சுகாதார கட்டிடங்களை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  இன்று (05.03.2025) திறந்து வைத்தார். 

விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன்,  மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,  திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி.செ.அமிர்தராஜ், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா,  மேயர் பெ.ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory