» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முத்துநகர் எக்ஸ்பிரஸ் 2வது பிளாட்பாரத்தில் நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி!

புதன் 5, மார்ச் 2025 10:52:21 AM (IST)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 2வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி இரவு 8.40 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது. இதுபோல் சென்னையில் இருந்து 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு வருகிறது. இதில் சுமார் 1300க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கிறார்கள். இதில் முதியோர்கள் அதிக அளவில் பயணம் செய்கிறார்கள்.

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடிக்கு வரும் போது இரண்டாவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் ரயிலை விட்டு இறங்கி முதல் பிளாட்பாரத்திற்கு சுமார் 100 படிகள் ஏறி இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வயதானவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றன. எனவே, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலை வழக்கம் போல் முதல் பிளாட்பாரத்தில் நிறுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

அதுக்குMar 5, 2025 - 02:41:16 PM | Posted IP 172.7*****

ரயில்வே பொறியாளருக்கு மூளை இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory