» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடன் தகராறில் வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய அண்ணன், தம்பி கைது!

புதன் 5, மார்ச் 2025 10:42:12 AM (IST)

தூத்துக்குடியில் கடனை திருப்பி கொடுக்காதால் ஏற்பட்ட தகராறில் தம்பதி உட்பட 3பேரை தாக்கிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர், மேற்கு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் மகன் ரெனிஸ்டன் (18), இவர் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் மகன் ஹரி பிரசாத் (25) என்பவரிடம் ரூ.33ஆயிரம் கடன் வாங்கி இருந்தாராம். கடனை திருப்பிக் கொடுக்காதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த ஹரி பிரசாத், அவரது அண்ணன் அரிராம் (27), மற்றும் அவரது நண்பர் துரைசாமி உள்பட6 பேர் கொண்ட கும்பல் ரெனிஸ்டனிடம் தகராறு செய்து அவரை பீர் பாட்டலால் சரமாரியாக தாக்கினார்களாம். இதை தடுக்க வந்த அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி அனுசியா ஆகிய இருவரையும் அவர்கள் தாக்கினார்களாம். 

இதில் காயம் அடைந்த 3 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஹரிராம், ஹரி பிரசாத் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory