» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆலந்தலை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!

புதன் 5, மார்ச் 2025 10:18:45 AM (IST)



ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. 

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் நாடு முழுவதும் இன்று முதல் தொடங்கியது. இதன் ஒரு பகுதியான தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் தவக்காலத்தில் தொடக்க நாளான இன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. 

இதனையொட்டி திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் காலை 6.00 மணிக்கு சிறப்பு திருப்பலி திருத்தல அதிபர் சில்வெஸ்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்கால திருநாட்களை கடைப்பிடிப்பதை குறித்து திரளாக திரண்டு வந்த கிறிஸ்தவர்கள் முன்னிலையில் எடுத்துரைத்தார். 

பின்னர் திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெற்றியில் சாம்பல் பூசி தவக்காலத்தை தொடங்கினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதனை தொடர்ந்து சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்குத்தந்தை ஜோதிமணி திருத்தல நிதி குழுவினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory