» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை!

புதன் 5, மார்ச் 2025 10:14:08 AM (IST)

தூத்துக்குடியில்  கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கிய நிலையில் இன்று  விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. 

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 272 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று (5ஆம் தேதி) புதன்கிழமை கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதால் அதிகாலை தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதில் மீனவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதன் காரணமாக மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாளை (6ம் தேதி) மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory