» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில் ஏப்.4 வரை ரத்து : தெற்கு ரயில்வே தகவல்!

புதன் 5, மார்ச் 2025 8:44:49 AM (IST)

தூத்துக்குடி-வாஞ்சிமணியாச்சி பயணிகள் ரயில் நாளை (மார்ச் 6) வியாழக்கிழமை முதல் அடுத்தமாதம் 4-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ரயில் நிலைய பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்காக ரயில்வே தண்டவாளத்தை உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி இடையேயான ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வாஞ்சிமணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு இரவு 9.05 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (56724) நாளை (வியாழக்கிழமை) முதல் 4.4.25 வரையும், தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (56725) நாளை முதல் 4.4.25 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதே போன்று வாஞ்சிமணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு காலை 3 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (56726) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் 5.4.25 வரையும், தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சிக்கு காலை 8.30 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (56723) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் 5.4.25 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது" என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory