» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கடற்கரையில் தேசிய ஆராய்ச்சி குழு ஆய்வு!
புதன் 5, மார்ச் 2025 8:43:14 AM (IST)
திருச்செந்தூர் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளை தேசிய கடலோர ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பு பக்தர்கள் புனித நீராடும் பகுதியில் கடந்த 2 மாதத்திற்கு முன் கடல் சீற்றம் காரணமாக அதிக அளவில் கடற்கரையில் மணல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 20 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியும், 7 அடி ஆழத்திற்கு பள்ளமும் ஏற்பட்டது.
மேலும் சில பகுதியில் கடல் நீரானது சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியும், பாறைகள் தெரிந்த வண்ணமும் இருந்தது. இதனால் பக்தர்கள் கோவில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது அந்த பகுதியில் பள்ளங்களில் ஓரளவு மணல் நிரம்பி காணப்படுகிறது.
இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாத இறுதியில் இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் குழுவினர் கோவில் முன் உள்ள கடற்கரையில் இருந்து அமலிநகர் வரை கடற்கரையோரம் நடந்து சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து 2-வது கட்டமாக டிரோன் மூலம் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் இறுதிக்கட்டமாக நேற்று மாலை திருச்செந்தூர் கோவில் கடற்கரை மற்றும் ஜீவாநகர் பகுதியில் தேசிய கடலோர ஆராய்ச்சி மைய இயக்குனர் ரமணமூர்த்தி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து மீன்வளத்துறை உதவி பொறியாளர் ஜெயசுதாவிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து ரமணமூர்த்தி கூறுகையில், ‘இந்த ஆய்வு குறித்த அறிக்கை வருகிற 7-ந் தேதி தமிழக தலைமை செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். அதைத்தொடர்ந்து திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை அரசு அறிவிக்கும்’ என்றார். ஆய்வின் போது கோவில் உதவி ஆணையர் நாகவேல், செயற்பொறியாளர் ஆறுமுகம், விஞ்ஞானி ராமநாதன் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










