» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அடிதடி வழக்கில் தேடப்பட்ட வாலிபர் தற்கொலை!

புதன் 5, மார்ச் 2025 7:54:39 AM (IST)

தூத்துக்குடியில் உறவினரை தாக்கிய வழக்கில் தேடப்பட்ட வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடி பூபாலராயா்புரத்தை சோ்ந்தவா் இருதயராஜ் (42). இவரது உறவினா்களான அதேபகுதியை சோ்ந்த ஜெயிஸ்டன்(25), அவரது சகோதரா்கள் டேவிட் பெக்காம் (23), எட்வின் (21) ஆகியோா் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, இருதயராஜ் வீட்டின் அருகே நின்று அவா்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டனராம். இதை இருதயராஜ் கண்டித்தாராம்.

இதனால் ஆத்திரம் அடைந்த சகோதரா்கள் 3 பேரும் சோ்ந்து இருதயராஜை தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த இருதயராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து வடபாகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து ஜெயிஸ்டன், எட்வின் ஆகிய இருவரையும் கைது செய்தனா். டேவிட் பெக்காமை தேடிவந்தனா்.

இந்நிலையில் டேவிட் பெக்காம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, டேவிட் பெக்காம் சடலத்தை மீட்டு கூறாய்வுக்கு அனுப்பினா். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory