» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் ஏற்றுமதி நிறுவன ஊழியர் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!

செவ்வாய் 4, மார்ச் 2025 11:36:54 AM (IST)

தூத்துக்குடியில் மினிபஸ் மீது பைக் மோதிய விபத்தில் தனியார் மீன் ஏற்றுமதி நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி டூவிபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் பிரகாஷ்ராஜ் (23), இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று தனது சித்தி மகனான சூரங்குடி தங்கம்மாள் புரத்தைச் சேர்ந்த கருத்தபாண்டி மகன் முத்து பாரதி (27) என்பவருடன் தனது பல்சர் பைக்கில் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சிதம்பர நகர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மினி பஸ் பின்புறத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிரகாஷ்ராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory