» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை : ரூ.3.63 லட்சம் பறிமுதல்
திங்கள் 3, மார்ச் 2025 8:25:25 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 63 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் பல்வேறு பத்திரப்பதிவுகளுக்கு பத்திரப்பதிவு அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கீழூர் பத்திரபதிவு அலுவலகத்தில் சோதனை செய்து கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இன்று மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்காக பணம் கைமாற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பாலுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து டிஎஸ்பி பீட்டர் பில் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மூன்றாவது மாடியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூபாய் 3,63,000 இருப்பதைக் கண்டு அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த பணத்தை வைத்திருந்தது தொடர்பாக மாவட்ட பதிவாளர் தணிக்கை சதாசிவம் மற்றும் புதுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலக உதவி பத்திரப்பதிவு அலுவலர் செல்வகுமார் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
ஆதிMar 3, 2025 - 11:36:48 PM | Posted IP 162.1*****
அரசு அவருக்கு போதுமான அளவு சம்பளம் கொடுத்தால் அவர் ஏன் லஞ்சம் வாங்கப்போறார் அவருக்கு துப்புரவு பணியாளர் பணிந்து பதவிஉயர்வு வழங்கவேண்டும்
சாமான்யன்Mar 3, 2025 - 11:15:17 PM | Posted IP 172.7*****
இதுல என்னடா பரபரப்பு? இதே ஜோலி தானே
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)











குமார்Jun 22, 1741 - 03:30:00 AM | Posted IP 104.2*****