» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தலையணையால் அமுக்கி தாய் - மகள் படுகொலை? 10 பவுன் நகைகள் கொள்ளை : போலீஸ் விசாரணை
திங்கள் 3, மார்ச் 2025 7:52:17 PM (IST)

எட்டயபுரம் அருகே தாய் - மகள் மர்மான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவன் மனைவி சீத்தாலட்சுமி (65). இந்த தம்பதியின் மகள் ராமஜெயந்தி (48), பூவன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் ராமஜெயந்தி தனது கணவர் விஷ்வாவுடன் ஏற்பட்ட தகராறில் கடந்த 3 ஆண்டுகளாக தனது தாயாருடன் வசித்து வந்தார்.
இதற்கிடையே இன்று மாலை 4 மணி வரை இவர்களது வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பார்த்தபோது படுக்கை அறையில் தாய் - மகள் இருவரும் இறந்து கிடந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மர்ம ஆசாமிகள் தாய் - மகள் இருவரையும் முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளனர். மேலும் இருவரது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்ற விபரம் தெரியவந்தது. தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அல்பர்ட் ஜான், விளாத்திகுளம் டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் தூத்துக்குடியில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். 2பேரின் உடல்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தாய், மகள் இருவரையும் கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










