» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்கமான பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

திங்கள் 3, மார்ச் 2025 5:19:06 PM (IST)



தூத்துக்குடியில் கனமழை பெய்தபோதும், வழக்கமாக மழைநீர் தேங்கும் பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவிததார். 

இது குறித்து மேயர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்கனவே மழை நீர் தேங்கிய பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கவில்லை. கோயில்பிள்ளை நகர் பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். 

அப்பொழுது அந்தப் பகுதியின் அருகே செல்லும் துறைமுகச் சாலையானது உயர்ந்து உள்ளதால் இந்தப் பகுதியானது மிகவும் பள்ளமாக உள்ளது. அதனை கருத்தில் கொண்டு வரும் காலங்களில் மாற்று வழி மூலமாக புதிய வடிகால்கள் அமைத்து தரப்படும் என்றார்.  ஆய்வின் போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாவட்ட தலைவரும் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க பொது செயலாளருமான தெர்மல் ராஜா, மாமன்ற உறுப்பினர் முத்துவேல் உட்பட பலர் உடன் சென்றனர். 


மக்கள் கருத்து

என்னதுMar 3, 2025 - 07:00:20 PM | Posted IP 162.1*****

ஒரே ஒருநாளுக்கு பெய்த மழையில் இவளவு பில்ட்டப் ஆ ? நாடகமா ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory