» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம்

திங்கள் 3, மார்ச் 2025 4:30:30 PM (IST)



தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் உயிர் காக்கும் இயக்கம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. 

முகாமிற்கு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜாய்சன் தலைமை வகித்தார் முகாமினை தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு, தூத்துக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் மதன் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர் 

முகாமில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி அதிகாரி மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் பொருளாளர் விக்னேஷ் மற்றும் டிரஸ்டிகள் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இரத்த வங்கி செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமினை அறக்கட்டளையின் டிரஸ்டி அசோக் குமார் ஒருங்கிணைத்திருந்தார். இம்முகாமின் இறுதியில் 96 அலகுகள் இரத்ததானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 384 உயிர்கள் காக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory