» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் நிர்வாக சபை தேர்தலை நடத்த கோரிக்கை!

திங்கள் 3, மார்ச் 2025 12:49:41 PM (IST)



தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் நிர்வாக சபை தேர்தலை துரிதமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி நகர மஹல்லாக்களின் கூட்டமைப்பு சார்பாக மின்னல் அம்ஜித், காதர் மைதின், கொளது மைதின், ஷாஜகான் ஆகிய முன்னாள் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டாக மனு அளித்தனர். இது குறித்து, நிர்வாகி, சையத் இப்ராகிம் பாஷா கூறும்போது, சுமார் 300 கோடி சொத்து மதிப்புள்ள தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 

ஜாமியா பள்ளிவாசல் பங்கிற்கு தமிழ்நாடு பங்கு வாரியத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால கமிட்டி 23.1.2025 தேதியில் காலாவதியாகி ஒரு மாதம் ஆகிறது.  ஆகையால் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக அலுவலகத்திலும், கிரஸன்ட் மேல்நிலைப்பள்ளி நிர்வாக அலுவலத்திலும் தமிழ்நாடு வக்பு வாரியம் தனது ஆளுமையின் கீழ் கொண்டு வந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு நடைபெறாமல் இருக்கும் நிர்வாக சபை தேர்தலை துரிதமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory