» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆபத்தான பாதாள சாக்கடை குழியால் விபத்து அபாயம் : தூத்துக்குடியில் வாகன ஓட்டிகள் அச்சம்!

ஞாயிறு 2, மார்ச் 2025 8:43:54 PM (IST)



தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே அபாய நிலையில் உள்ள பாதாள சாக்கடை குழியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மேம்பாலத்தின் வடபுறம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே பேருந்துகள் வரும் மெயின் ரோட்டில் நடுவில் பாதாள சாக்கடை குழி பழுதடைந்து உடைந்து உள்ளது. அதில் யாரோ கல்லை நட்டி சென்றுள்ளனர். இந்த குழி பேருந்து நிலையத்தில் இருந்து வெளிவரும் சர்வீஸ் ரோட்டையும், மேம்பாலத்தின் இருந்து வரும் சாலையையும் இணைக்கும் சாலையின் நடுவில் இருப்பதனால் வாகன ஓட்டிகள் கவனம் குறைவாக வந்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கல்லை நடாமல் இருந்தால் கூட பெரிய ஆபத்து நிகழாது. ஆனால் இந்த கல்லை பாதாள சாக்கடை குழியில் நட்டியிருப்பதால் கவனக்குறைவாக வரும் வாகன ஓட்டிகள் அதில் மோதி ஆபத்து நடைபெறும் சூழல் உள்ளது. தினமும் ஆயிரக்கனக்கான வாகனங்கள் கடக்கும் பிரதான சாலையாக இருப்பதனால் விபத்து ஏற்படும் முன்பே மாநகராட்சி நிர்வாகம் உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory