» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோடைகாலத்தில் மின்வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்த நடவடிக்கை : ஜெ.ராதாகிருஷ்ணண்
சனி 1, மார்ச் 2025 9:23:08 PM (IST)

கோடைகாலத்தில் மின்வெட்டு இல்லாத நிலையை கடைபிடிக்க தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என தமிழ்நாடு மின்வாரியம் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜெ.ராதாகிருஷ்ணண் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், உடன்குடி மிகஉய்ய அனல்மின் திட்டம் – நிலை – I பணிகள் நடைபெற்று வருவதை தமிழ்நாடு மின்வாரியம் தலைவர் மற்றும் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மேலாண்மை இயக்குநர் ஜெ.ராதாகிருஷ்ணண், இன்று (01.03.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது: திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடி காலன்குடியிருப்பில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் எரிசக்தி முழுமையாக நம்முடைய தேவைக்கு இருக்க வேண்டும். அதே போல் புதிய திட்டங்களின் மூலமும் மின்சாரம் கிடைக்க செய்ய வேண்டும் என்பதற்காக இந்த உடன்குடி திட்டத்தை விரைவாக முடிக்க அறிவுருத்தியுள்ளார்கள்.
ரூ.13,077 கோடி மதிப்பீட்டில் மூன்று கட்டங்களாக இப்பணி அமைக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 660 மெகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட மின் எந்திரம் அமைக்கும்பணி நடந்து வருகிறது. முதல் முறையாக தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் இந்த ஜெட்டி அமைக்கப்படுகிறது. சுமார் 8 கி.மீ. தொலைவிற்கு கடல் உள்ளே நிலக்கரி கொண்டு வரும் கப்பலை நிறுத்திவிட்டு, அதிலிருந்து நிலக்கரியை கொண்டுவர உயர்மட்ட ராட்ச இரும்பு கம்பிபாலம் அமைக்கும் பணியும் முடியும் நிலையில் உள்ளது. இந்த பாலம் வழியாக ராட்சத கண்டெய்னர் மூலம் கடலில் இருந்து அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி நேரடியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும், முதல் யூனிட்க்கான பணிகள் முடிவடைந்து மே மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்தாலும். பணியாளர்கள் பற்றாகுறை இருப்பதாலும் தொய்வு ஏற்பட்டு உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது.
மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மின் தேவையினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், வெளி மின்சந்தை, மின் பரிமாற்றம் மற்றும் குறுகிய கால ஒப்பந்தம் வாயிலாக எந்த வித பற்றாக்குறையும் இல்லாமல் திட்டமிடப்பட்டு உள்ளது. மின்சார வாரியங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், கடன் சுமையை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வந்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
ஆய்வின்போது, தலைமை பொறியாளர் (பொ) ராம்குமார், மேற்பார்வையாளர்கள் பாண்டியராஜன், ராஜேந்திரன், தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக உதவி இயக்குநர் மூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










