» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!
சனி 1, மார்ச் 2025 5:26:42 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் வழங்கினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்த சேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்டத் துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரேவதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிஎன் மதியழகன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா முருகேசன், ஜெயலட்சுமி, வட்டச் செயலாளர்கள் கதிரேசன், செல்வராஜ், வழக்கறிஞர் ரூபராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவிகளுக்கு அறுசுவை மதிய உணவு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி புனித அலாசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி மாணவிகளுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது.
திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஏற்பாட்டில், வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், மாவட்ட அமைப்பாளர் அபிராமிநாதன் தலைமையில் தூத்துக்குடி புனித அலாசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி மாணவிகளுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னதாக மாணவிகள் ஜெபம் செய்து முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் முதலமைச்சர் பிறந்தநாள் உறுதி மொழியை தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மாவட்ட அமைப்பாளர் அபிராமிநாதன் தலைமையில் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், நாகராஜன், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை, வைதேகி எம்.சி, பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் திரேஸ்புரம் பகுதி சுரேஷ்குமார், மகேஸ்வரி, அண்ணாநகர் மார்கின் ராபர்ட், முத்தையாபுரம் ஆனந்த், சண்முகபுரம் பிரிஸ்கா, பிரையன்ட் நகர் சுப்புலட்சுமி மற்றும் வட்டச் செயலாளர் டென்சிங், மாநகர மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் டோளி, 25 வது வட்ட துணைச் செயலாளர் கன்னி மரியாள், 22 வது வார்டு வட்டத் துணைச் செயலாளர் பிரிதாலட்சுமி, 48வது வார்டு பிரதிநிதிகள் குமார், ஜேசு, மற்றும் போல் பேட்டை தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










