» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவலர்களுக்கு மன அழுத்தம் நீக்கும் சிறப்பு பயிற்சி
சனி 1, மார்ச் 2025 8:42:22 AM (IST)

தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் துறையினருக்கு மன அழுத்தம் நீக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி நகரின் மிக பிரபல மனநல மருத்துவர் எஸ். சிவசைலம் கலந்து கொண்டு காவலர்களுக்கு சிறப்பு பயிற்சியளித்தார். அவர் கூறுகையில் காவலர்கள் தினந்தோறும் எண்ணற்ற மனஅழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். மன அழுத்தத்தை குறைத்து அவர்களை மேலும் திறம்பட பணியாற்ற மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி, நேர்மறை எண்ணங்களை மேற்கொள்வது, தேவையான ஓய்வு எடுத்து கொள்வது போன்றவைகளை செய்வதால் பணித்திறன் மேம்படுவதுடன் காவலர்களின் மனநலன் காக்கப்படும் என்றார்.
தியானம், யோகாசனங்களை தொடர்ந்து செய்து வந்தால் மனஅழுத்தம் குறைந்து மனஅமைதி பெறுவதுடன் சகிப்புத்தன்மை, பொறுமை, பிரச்சனைகளை சீராக கையாளும் திறன், சரியான முடிவுகளை எடுக்கும் பண்புகள் போன்றவை வளரும் என்று கருத்தரங்கத்தில் தெரிவிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட காவலர்கள் கொண்ட இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர் மீகாராம் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










