» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அளவுக்கு அதிகமாக மது குடித்த வாலிபர் சாவு : திருமணம் நின்று போனதால் சோகம்!

வெள்ளி 28, பிப்ரவரி 2025 7:59:00 PM (IST)

தூத்துக்குடியில் திருமணம் நின்று போனதால் அளவுக்கு அதிகமாக மது குடித்த வாலிபர் உயிரிழந்தார். 

உத்திரபிரேதச மாநிலம், ஜான்பூரைச் சேர்ந்தவர் பீம்சென் மகன் ஊடால் (31). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். தெற்கு வீரபாண்டியபுரத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தார். இவருக்கு கடந்த 9ம் தேதி ஊரில் வைத்து திருமண நிச்சயதார்த்த நடந்துள்ளது. பின்னர் அவர் வேலைக்கு வந்து விட்டார். 

இந்நிலையில கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பெண் வீட்டார் திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டார்களாம். இதனால் மன வேதனையடைந்த அவர் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்துள்ளார். இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory