» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

வெள்ளி 28, பிப்ரவரி 2025 5:40:33 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது

ஓவ்வொராண்டும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, சர். சி.வி.இராமன் ‘இராமன் விளைவு’ கண்டுபிடித்த நாளான, 28, பிப்ரவரி ஆனது தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் இத்தினமானது அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளில் உலகளாவிய தலைமைத்துவத்திற்கு இந்திய இளைஞர்களை மேம்படுத்துதல் என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில், அறிவியல் பேரவையானது மாணவர்களுக்கு இடையே சுவரொட்டி தயாரித்தல், கட்டுரை எழுதுதல், அறிவியல் புதிர்களை தீர்ப்பது மற்றும் ருபிக்ஸ் கனசதுரத் தீர்வு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் நடந்த விழாவில் மாணவர் சங்க துணைத்தலைவர் ந. ஜெயக்குமார் வரவேற்றார். வே.ராணி முதல்வர் பொறுப்பு தலைமை உரையை வழங்கினார்.

ர. பிரித்திகா அறிவியல் தின உரை நிகழ்த்தினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. எம். ஜெசு மிராக்கிலின், மாணவர் சங்கத்தின் அறிவியல் கழகச் செயலாளர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்ததுடன் நன்றி உரையாற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory