» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி அரசுமகளிர் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

வெள்ளி 28, பிப்ரவரி 2025 5:24:36 PM (IST)



கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது.

இந்திய அறிவியல் அறிஞர் சர்.சி வி.இராமன் கண்டுபிடித்த ராமன் விளைவை உலகுக்கு அறிமுகப்படுத்திய தினமான பிப்.28ம் தேதியை தேசிய அறிவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பள்ளி மாணவிகள் பல்வேறு அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா,மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார்.

அறிவியல் கண்காட்சியை பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் முனுசாமி பார்வையிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் கோகிலா, அம்பிகா, சாந்தி, காந்திமதி, அகிலாராணி, கமலாராணி உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை கெங்கம்மாள் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory