» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி இஞ்ஞாசியார் பள்ளி மாணவர்கள் களப்பயணம்!

வெள்ளி 28, பிப்ரவரி 2025 4:48:44 PM (IST)



தூத்துக்குடி தூய. இஞ்ஞாசியார் பள்ளி தேசிய பசுமை படை மாணவர்கள் விமான நிலையம் உளிட்ட பகுதிகளில் களப்பயணம் மேற்கொண்டனர். 

தூத்துக்குடி தூய. இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமை படை மாணவர்கள் தூத்துக்குடி விமானம் இறங்கும் தளத்தை பார்வையிட்டனர். வல்லநாடு வெளிமான்கள் உய்விடத்தை பார்வையிட்டனர். வனவிலங்கு அதிகாரி அசோக்குமார் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். பின்பு திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தை பார்வையிட்டனர். அங்கு பலவிதமான அறிவியல் கணிதம் ஆக்கபூர்வமான செய்திகளையும் மாணவர்கள் அறிந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சேசு அந்தோணி ஒத்துழைப்புடன் தாளாளர் தந்தை கிருபாகரன் அடிகளார் வழிகாட்டுதலிலும் ஆசிரியர் ராஜ்குமார் சாமுவேல், பொறுப்பாசிரியர் ஆசிரியை சுகவதி தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர். இதில் தேசிய பசைப்படை மாணவ மாணவிகள் உறுப்பினர்கள் மொத்தம் 35 பேர் பங்கேற்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory