» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆம்னி காரில் கடத்தி வந்த 1,110 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர் கைது

வெள்ளி 28, பிப்ரவரி 2025 8:03:36 AM (IST)



கோவில்பட்டியில் ஆம்னி காரில் கடத்தி வந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை தனிப்படை போலீசார்  பறிமுதல் செய்து, கார் ஓட்டுநரைக் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து கயத்தாறுக்கு காரில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார்  திருநெல்வேலி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவ்வழியே சென்ற ஆம்னி காரை நிறுத்தி சோதனையிட்டபோது, ஓட்டுநரான மேலபாண்டவர்மங்கலம் அக்ரஹார தெருவைச் சேர்ந்த பூல்பாண்டி என்ற கொம்பையா மகன் பாண்டித்துரை (32) என்பவர் 1,100 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்வது தெரியவந்தது. தூத்துக்குடி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ரேஷன் அரிசி, வாகனம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார்  வழக்குப் பதிந்து, பாண்டித்துரையைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory