» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல் நிலையத்தில் பைக் திருட்டு: சிறுவன் உள்பட 2 பேர் கைது

வெள்ளி 28, பிப்ரவரி 2025 8:00:22 AM (IST)

கோவில்பட்டி காவல் நிலையத்தில் நிறுத்தியிருந்த தலைமைக் காவலரின் பைக்கை திருடியதாக சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றுபவர் கவிதா. இவர், காவல் நிலைய வளாகத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லை என கடந்த புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி, பைக்கை திருடிச் சென்ற தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் மாரி செல்வம் (21), அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory