» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆளுநர் ஆர்.என். ரவி சுவாமி தரிசனம்
வியாழன் 27, பிப்ரவரி 2025 10:07:06 PM (IST)

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று 4. 00 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த கவர்னர், அங்கிருந்து காரில் திருச்செந்தூர் சென்று அய்யா வைகுண்டர் அவதார பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
அவரை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர், துணை தலைவர் அய்யா பழம், பொருளாளர் கோபால், செயலாளர் பொன்னுதுரை ,துணைச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். முன்னதாக கடற்கரைக்கு சென்று கவர்னர் ஆர். என். ரவி தீர்த்த வாரி செய்து பின்னர் பதியில் சுமார் ஒரு மணி நேரம் சுற்றி பார்த்து நிர்வாகிகளுடன் உரையாடினார். அவருக்கு பதி சார்பில் குத்துவிளக்கு மற்றும் அய்யனார் வைகுண்டரின் உருவப்படம் வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காரில் நெல்லைக்கு சென்றடைந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)











ஆம்Mar 1, 2025 - 12:07:21 PM | Posted IP 104.2*****