» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பேய்க்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி பலி
வியாழன் 27, பிப்ரவரி 2025 10:05:55 PM (IST)
பேய்க்குளம் அருகே குளத்தில் மூழ்கி 17 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம் பேய்க்குளம் அருகே உள்ள வசவப்பனேரி ஊரைச் சேர்ந்த லிங்கதுரை (42) என்பவருக்கு 4 மகன் 1 மகள் உள்ளனர். அவரது மகள் பொன்னாத்தாள் (17) என்பவர் இன்று மதியம் சுமார் 1 மணியளவில் வீட்டில் வளர்க்கும் மாட்டினை வசவப்பநேரி பெரிய குளத்தில் குளிப்பாட்ட சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக குளத்து நீரில் மூழ்கி விட்டார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் வாகனம் மூலம் ஶ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பொன்னாத்தாள் இறந்துவிட்டார். இறந்து போன நபரின் உடல் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










