» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் மாசி திருவிழா ஆலோசனைக் கூட்டம்

வியாழன் 27, பிப்ரவரி 2025 10:03:48 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

திருச்செந்தூர் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழா வரும் 3ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி சிறப்பு ஆலோசனைக் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையில் இன்று நடைபெற்றது. 

கூட்டத்தில் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி குடிநீர் கழிப்பிடம், பஸ் வசதி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், நகராட்சி ஆணையர் கண்மணி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாவநாச குமார், வட்டாட்சியர் பாலசுந்தரம் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory