» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரேஷன் கடையில் ஆதார் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்

வியாழன் 27, பிப்ரவரி 2025 5:04:09 PM (IST)

மானிய விலையில் உணவுப் பொருட்கள் தொடர்ந்து பெற விரும்பும் பயனாளிகள் தங்களது ஆதார் எண் உள்ளீடு செய்வதற்கான கால அவகாசம் மத்திய அரசால் நீடிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 -கீழ் மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற, பயனாளிகள் ( UIDAI . gov.in) என்ற இணையதள முகவரியில் தங்களது ஆதார் எண் பதிவு செய்தல் அல்லது ஆதார் எண் அங்கீகாரம் செய்ய வேண்டும்.

நாளது தேதி வரை ஆதார் எண் பெறப்படாத பயனாளிகள் / ஆதார் எண் உள்ளீடு செய்யாத பயனாளிகள் தொடர்ந்து மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற விரும்பினால் தங்களது ஆதார் எண்களை இணையதளத்தில் 31.03.2025 வரை உள்ளீடு செய்ய கால அவகாசம் மத்திய அரசால் நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே மானிய விலையில் உணவுப் பொருட்கள் தொடர்ந்து பெற விரும்பும் பயனாளிகள் தங்களது ஆதார் எண் உள்ளீடு செய்வதற்கான கால அவகாசத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory