» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பரோட்டா மாஸ்டருக்கு அரிவாள் வெட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வியாழன் 27, பிப்ரவரி 2025 11:15:14 AM (IST)

தூத்துக்குடியில் பரோட்டா மாஸ்டரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 10பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி தாளமுத்துநகர், மேட்டுப்பட்டி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அன்வர் மகன் முகமது (26) இவர் தாளமுத்து நகரில் உள்ள ஓட்டல் கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்த பின்னர், தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மது அருந்தினாராம். 

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று இரவு 10 பேர் கொண்ட கும்பல் முகமது வீட்டுக்கு சென்று அவரை வெளியே அழைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினார்களாம். இதில் கை, கால் உள்பட 14 இடங்களில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory