» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடைக்குள் புகுந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது!

வியாழன் 27, பிப்ரவரி 2025 8:17:59 AM (IST)

கோவில்பட்டி அருகே கடைக்குள் புகுந்து அரிவாளைக் காட்டி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த அஸ்வின் குமாா் மனைவி அனுசியா. இவா் அங்குள்ள மேட்டுத் தெருவில் மின்சாதனங்கள் விற்பனையகம் நடத்தி வருகின்றனா். இவா்களுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முருகனுக்கும் (45) இடையே இடப் பிரச்னை இருந்ததாம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அனுசியா கடையில் இருந்தாா். அப்போது, முருகன் அரிவாளுடன் சென்று கடையை மூடுமாறு கூறி அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அனுசியா நேற்று அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீசார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory