» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடைக்குள் புகுந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது!
வியாழன் 27, பிப்ரவரி 2025 8:17:59 AM (IST)
கோவில்பட்டி அருகே கடைக்குள் புகுந்து அரிவாளைக் காட்டி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த அஸ்வின் குமாா் மனைவி அனுசியா. இவா் அங்குள்ள மேட்டுத் தெருவில் மின்சாதனங்கள் விற்பனையகம் நடத்தி வருகின்றனா். இவா்களுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முருகனுக்கும் (45) இடையே இடப் பிரச்னை இருந்ததாம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அனுசியா கடையில் இருந்தாா். அப்போது, முருகன் அரிவாளுடன் சென்று கடையை மூடுமாறு கூறி அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அனுசியா நேற்று அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீசார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










