» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதியோர்களுக்கு மனநல ஆலோசகர் நியமனம் : தூத்துக்குடி மாநகராட்சி ஏற்பாடு!

சனி 22, பிப்ரவரி 2025 8:03:25 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முதியோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முதியோர்களை மகிழ்விக்கும் விதமாக ஆயிரம் பிறை பூங்கா முதியோர் மகிழ்விடம் பூபாலராயபுரம் கருப்பட்டி சொசைட்டி சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி பூங்காவிற்கு வரும் முதியோர்களை சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சியால் ஆலோசகர் நியமிக்கப்பட்டு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனநல ஆலோசகர் ஜெயக்குமார் ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், முதியோர்கள் அவர்களுடைய மன நலனை பாதுகாக்கும் வகையில் விளையாட்டுக்கள் உடற்பயிற்சிகள் மற்றும் நடத்தை மாற்றங்கள் ஆகியவையும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றன. மேற்படி நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் வெள்ளி,சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் மாலை 6.00 மணி அளவில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory