» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைனான்சியர் தற்கொலை!

சனி 22, பிப்ரவரி 2025 11:54:10 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.5லட்சம் கடன் திரும்பி வராததால் மன வேதனையில் பைனான்சியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி  லயன்ஸ் டவுன் 5வது தெருவைச் சேர்ந்தவர் ஜேசு மகன் லியோனா சர்ப்பராஜ் (56), இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். பின்னர் ஊர் திரும்பிய அவர் தூத்துக்குடியில் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தாராம். 

இதில் ரூ.5 லட்சம் வரை பணம் திரும்பி வராததால் அவர் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory