» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல்துறையினருக்கு இலவச பேருந்து பயண அட்டை : எஸ்பி ஆல்பர்ட் ஜான் வழங்கினார்

சனி 22, பிப்ரவரி 2025 11:03:33 AM (IST)



தூத்துக்குடியில் காவல்துறையினருக்கான தமிழக அரசின் இலவச பேருந்து பயண அட்டையை எஸ்பி ஆல்பர்ட் ஜான் வழங்கினார்.

காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று காவலர் முதல் ஆய்வாளர் வரை அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் பிரத்தியேக பயண அட்டையை பயன்படுத்தி அரசு பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பணி நிமித்தமாக எந்த பகுதிக்கும் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும், இதற்காக நவீன அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு அரசால் வழங்கப்பட்ட 2650 இலவச பேருந்து பயண அட்டையினை (Free Bus Pass)  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து காவல்துறையினருக்கு வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory