» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணிடம் 5½ பவுன் தங்க செயின் பறிப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு!

சனி 22, பிப்ரவரி 2025 8:33:01 AM (IST)

கோவில்பட்டியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் 6ஆவது தெருவை சேர்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவர், நேற்று அப்பகுதியில் 4ஆவது தெருவில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்றுவிட்டு, திரும்பி வந்துகொண்டிருந்தாராம். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், கோமதி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 5½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பினாராம். 

இதுகுறித்து கோமதி அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory