» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு : பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
சனி 22, பிப்ரவரி 2025 8:25:04 AM (IST)
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்தால் ‘போக்சோ’ மாநிலமாக மாறிவிடும் என தமிழக அரசை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடியில் பாஜக முன்னாள் மாநில பொதுச் செயலர் சரவணப்பெருமாள் 8ஆம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பு, ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற பரப்புரை தொடக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், பங்கேற்ற பொன். ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் உள்ளிட்ட சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தமிழக அரசு விரைந்து கட்டுப்படுத்தவில்லையெனில், இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு ‘போக்சோ’ மாநிலமாக மாறிவிடும். இதே நிலை நீடிக்குமேயானால், 2026-க்குள் இந்த ஆட்சி இல்லாமல் போய்விடும்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொது இடங்களில், பொறுப்புடன் பேச வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்த பின்னதான், இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எல்லை குறித்த பிரச்னைகளை கனிவுடன் அணுக வேண்டும். அவற்றுக்கு சில கால அவகாசம் தேவை என்றார்.
இந்நிகழ்வில், மாவட்டத் தலைவர்கள் சித்ராங்கதன்(தெற்கு), சரவண கிருஷ்ணன் (வடக்கு), மருத்துவப் பிரிவு மாநிலச் செயலர் ருக்மணி, வர்த்தகப் பிரிவு மாநிலத் தலைவர் ராஜகண்ணன், ஓபிசி அணி மாநில துனைத் தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்டபொதுச்செயலர் ராஜா சத்தியசீலன், வடக்கு மாவட்டபொதுச்செயலர் வேல்ராஜா மாவட்ட துணைத் தலைவர்கள் செல்வராஜ், சிவராமன், வாரியார், தங்கம் சரஸ்வதி உள்பட பலர் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)










