» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அரசு பஸ் மோதி பெண் காயம்
வெள்ளி 26, ஏப்ரல் 2024 8:09:53 AM (IST)
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தின் சக்கரம் ஏறியதில் பெண் காயம் அடைந்தார்.
தூத்துக்குடி சக்தி நகரைச் சோ்ந்த பூசையா மனைவி சண்முகத்தாய் (43). இவா் நாலுமாவடி செல்வதற்காக தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் நேற்று பேருந்துக்காக காத்திருந்தாராம். அப்போது, அங்கு வந்த அரசுப் பேருந்தில் சண்முகத்தாய் ஏற முயற்சித்தபோது, எதிா்பாராத விதமாக தவறி விழுந்ததில் பேருந்தின் சக்கரத்தில் கால் சிக்கி பலத்த காயமுற்றாா்.
சக பயணிகள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.