» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குளத்தில் மூழ்கி நண்பர்கள் இருவர் பலி : தூத்துக்குடி அருகே பரிதாபம்!

ஞாயிறு 5, மே 2024 7:03:05 PM (IST)

தூத்துக்குடி அருகே குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி நண்பர்கள் 2பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி (25). கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் ஏசுபாலன் (26) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரகாஷ் (25), முருகேசன் (25) ஆகியோருடன் தங்களது நண்பரான பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம்  வீட்டிற்கு வந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் இன்று மாலை அனைவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு பண்டாரவிளை குளம் சுடலைமாடன் கோவில் படித்துறையில் குளித்தபோது ஏசுபாலன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து ஊர்மக்கள்  சடலத்தை மீட்டுள்ளனர். இது குறித்து ஏரல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குளத்தில் மூழ்கி நண்பர்கள் 2பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory