» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பங்காரு அம்மா மக்கள் நலப்பணி திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் நீர், மோர் பந்தல் திறப்பு

ஞாயிறு 5, மே 2024 6:47:17 PM (IST)



தூத்துக்குடியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் 2 இடங்களில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா மக்கள் நலப்பணி திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் தமிழ்ச்சாலையில் 2 இடங்களில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. ஆன்மிக இயக்க மாவட்டத் தலைவர் சக்தி. ஆர்.முருகன் பஞ்சதெய்வ வழிபாடு, மழை வேண்டல் வழிபாடு செய்து திறந்து வைத்தார். 

பின்னர், அனைவருக்கும் நீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வேள்விக்குழு இணைச் செயலாளர் கிருஷ்ண நீலா, திருவிக நகர் சக்திபீட துணைத் தலைவர் திருஞானம், மகளிர் அணி பத்மாவதி, வட்டத்தலைவர் தினேஷ், இளைஞர் அணி தேவராஜ், சிதம்பரநகர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory